சஹாரா தமிழ்

ads

ஞாயிறு, 27 அக்டோபர், 2019

தோப்புத்துறை பள்ளிவாசலில் சுர்ஜித்துக்காக பிரார்த்தனை!






இன்று (27.10.19) தோப்புத்துறை பெரிய பள்ளிவாசலில் , மதிய நேர (அஸர்) தொழுைகக்கு பின்பு , குழந்தை சுர்ஜித் மீண்டு வர சிறப்பு பிரார்த்தனை நடைப்பெற்றது.

இமாம் முனீர் அவர்கள் பிரார்த்தனை ( துவா) செய்தார்.

இதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, ஜமாத் தலைவர் AR.ஷேக் அப்துல்லா, முன்னாள் ஜமாத் தலைவர் K .
M K. I. .நவாஸ்தீன், ஜமாத் செயலர் அபுபக்கர் சித்தீக் மற்றும் ஜமாத்தினர்கள், மாணவர்கள், இளைஞர்கள்  பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய, மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் , மீட்பு பணியில் ஈடுபடும் அமைச்சர்கள்,,அதிகாரிகள், வீரர்கள் பாராட்டுக்குரியவர்கள்  என்றவர், அக்குழந்தை மீண்டு வர வேண்டும் என நாடே காத்திருப்பதாக கூறினார்.

மேலும், இனி வரும் காலத்தில் இது போன்ற பேரிடர்களில் சீனாவின் தொழில் நுட்பத்தை பயன்படுத்த முனைப்பு காட்ட வேண்டும் என்றார்.

இந்திகழ்வை பிரபல கல்வி மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பான முஸ்லிம் மாணவர் முன்னணி (MSF) ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று நாகூர் தர்ஹா மற்றும் முத்துப்பேட்டை தர்ஹாவிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைப்பெற்றதோடு, பரவலாக தமிழக மெங்கும் பள்ளிவாசல்களில் குழந்தை சுர்ஜித்துக்காக பிரார்த்தனைகள் நடைப்பெற்று வருவது அனைவரையும் உருக வைத்திருக்கிறது.

புனித மெக்கா, மதீனா விலும் தமிழக யாத்ரீகர்கள் பிரார்த்தனை நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

           செய்தி வெளியீடு:

        MSF, தோப்புத்துறை
        நாகை மாவட்டம்

புதன், 10 ஜூலை, 2019

திங்கள், 24 செப்டம்பர், 2018

திடீர் உடல்நலக்குறைவு..! சிறையில் மயங்கி விழுந்த திருமுருகன் காந்தி..!!

   வேலூர்.செப்.24., மே17- இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடந்த மாதம் ஐ.நா சபையில் தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாகப் பேசினார். இதைத் தொடர்ந்து பெங்களூரு விமான நிலையம் வந்த அவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். அதன் பின்னர், அவர் சென்னை கொண்டுவரப்பட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஆனால், நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.

இதன் பின்னர், தடையை மீறி ஊர்வலமாகச் சென்ற வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார். மேலும் 2017-ம் ஆண்டில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசியதற்காக அவர் மீது #தேச_விரோத நடவடிக்கை தடுப்பு பிரிவின் (#UAPA) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதன் பின்னர், சென்னை எழும்பூர் நீதிமன்றம் திருமுருகன் காந்தி மீது போடப்பட்ட உபா சட்டத்தை ரத்து செய்தது.

45 நாள்களாகத் திருமுருகன் காந்தி வேலூர் சிறையில் தனி அறையில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார். பகலில்கூட சிறையில் இருக்கும் மற்றவர்களைச் சந்திக்கவோ, பேசவோ, வெளியில் செல்லவோ அனுமதிக்கப்படுவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் தூசி படிந்த, பூச்சிகள் பெருமளவில் நுழையும் சுகாதாரமற்ற அறையில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளார் என்றும் மே 17 இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில் திருமுருகன் காந்திக்கு நேற்றுமுன்தினம் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ஏற்கெனவே தனது உடல்நிலை மோசமாக உள்ளதாகவும், தனக்கு மருத்துவ பரிசோதனை தேவை என்றும் குறிப்பிட்டிருந்தார். அதற்கு நீதிமன்றங்கள் அனுமதி அளித்தும் போலீஸார் தொடர்ந்து அவரை மருத்துவமனை அழைத்துச் செல்லாமல் காலம் தாழ்த்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் நேற்று திருமுருகன் காந்தி உடல் நலம் சரியில்லாமல் மயங்கி விழுந்துள்ளார்.

அதன் பின்னர், அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், இது தொடர்பாகத் திருமுருகன் காந்தியின் உறவினர்களுக்கோ அல்லது வழக்கறிஞருக்கோ தகவல் தரப்படவில்லை. அவரின் உடலில் சர்க்கரையில் அளவு மற்றும் ரத்த அழுத்தத்தின் அளவு ஆகியவை குறைவாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் தகவலும் இன்று சிறையில் அவரின் குடும்பத்தார் சந்திக்கச் சென்றபோதுதான் தெரியவந்துள்ளது.

ஹெச்.ராஜாவை கைது செய்ய வேண்டும்..! மாணவர் இந்தியா அமைப்பு வலியுறுத்தல்..!!

சென்னை.செப்.24., தொல்லியியல் ஆய்வாளர் பத்மாவதி எழுதிய மாணிக்கவாசகர் காலமும் கருத்தும் நூலுக்கு பாஸிச அமைப்புகள் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்துக் கொண்டிருக்கின்றன.நூலின் உரை விளக்கம் கொடுத்த சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் நல்லூர் சரவணன் அவர்களுக்கு ஹெச்.ராஜா உள்ளிட்ட இந்துத்வா தலைவர்கள் மிரட்டல் விடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்க வேண்டும் என்று ஆளுநருக்கு புகார் கொடுத்துள்ளனர்.

இதனை கண்டித்து பல்கலைக்கழக மாணவர்கள் சார்பாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.

இந்த சந்திப்பில் மாணவர் இந்தியா என்ற தமிழகத்தின் முன்னணி மாணவர் அமைப்பின் மாநில செயலாளர் அஸாருதீன் அவர்கள் ஹெச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்.

திங்கள், 6 ஆகஸ்ட், 2018

மரக்கன்றுகளும்..! மத நல்லிணக்கமும்..!!

  தோப்புத்துறை கோவில் திருவிழாவிற்கு வருகை தந்த பக்தர்களுக்கு நீர் விழிப்புணர்வு பிரச்சார அமைப்பு சார்பாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை தோப்புத்துறை ஜமாத் மன்றத் தலைவர் I.நவாஸ்தீன்,டாக்டர் அக்பர் அலி,p.சாகுல் ஹமீத்,ஹாசிப் புகாரி மற்றும் காதர் மெய்தீன் ஆகியோர் மரக்கன்றுகளை வழங்கி துவக்கி வைத்தனர்.

விழாவிற்கு வந்த பொதுமக்கள் ஆர்வமாக மரக்கன்றுகளை வாங்கி சென்றனர்.சுமார் 1000 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

இயற்கையை பாதுக்காக்கும் இந்த முயற்ச்சியை அனைவரும் பாராட்டினர்.மேலும் மத நல்லிணக்கத்தை வளர்க்கும் செயல் இது என்றும் நெகிழ்ச்சியுடன் கூறினர்.

பொதுநலன் கருதி...

#நீர்_விழிப்புணர்வு_பிரச்சார_அமைப்பு
தோப்புத்துறை

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

குளத்தில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலை..! அதிகாரிகளிடம் ஒப்படைத்த முஸ்லிம் பெரியவரின் மனித நேயம்..!!

  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகில் இருக்கிறது #நாச்சிக்குளம். இங்கு முஸ்லீம்களும், தேவர்களும், தலித்துகளும் நிறைந்து வாழ்கிறார்கள்.

இவ்வூருக்கு அருகில் உள்ள #சிறுபனையூர் கிராமத்தில் நேற்று (04.08.18) #சாகுல்_ஹமீது (வயது 70) என்பவருடைய மீன் பிடி குளத்தில் தண்ணீர் வற்றிப் போனது.

அன்றைய தினம் தண்ணீர் மேலும் குறைந்ததால் சேற்றில் ஒரு சாக்கு மூட்டை தெரிந்தது.

அதை பிரித்துப் பார்த்தப் போது அதில் #ஐம்பொன்_சிலை இருப்பது தெரிய வந்தது.

உடனே சாகுல் ஹமீது அவர்கள் வருவாய் ஆய்வாளருக்கும், காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தார். பிறகு காவல் துணை கண்காணிப்பாளர் முன்னிலையில் வருவாய் ஆய்வாளரிடம் ஐம்பொன் சிலையை ஒப்படைத்தார்.

சிலை கடத்தல் பரபரப்புகள் உலா வரும் நிலையில், ஒரு முஸ்லீம் பெரியவர் சாமி சிலையை மீட்டு அதிகாரிகளிடம் ஒப்படைத்தது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அனைவரும் சாகுல்ஹமீது அவர்களை பாராட்டி வருவது அப்பகுதியின் சமய நல்லிணக்கத்தை எடுத்துக் கூறுவதாக அமைத்துள்ளது.

#மலரட்டும்_மனிதநேயம்..!
#பரவட்டும்_சமூக_நல்லிணக்கம்..!!

ஞாயிறு, 8 அக்டோபர், 2017

டெங்கு_தோலுரிக்கும்_கட்டுரை !

இயற்கையின் அற்புதப் புதையல் கொண்ட அறிவு செரிந்த பதிவு இது. உலகில் உள்ள ஒவ்வொறு மனிதரும் இதை கட்டாயம் படிக்க வேண்டும்.

டெங்கு காய்சலை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் காய்சல் என்றால் என்ன என்று பார்ப்போம்.

மனித உடல் பல லட்சம் கோடிக்கணக்கான செல்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. 37.2 Trillion செல்கள் என சொல்லப்படுகிறது. ஒவ்வொறு செல்லும் உணவு அருந்தி, சக்தியை கொடுத்து, கழிவுகளை வெளியேற்றுகிறது.

இது தொடர்ந்து நடைபெற்று வரும், நமது தவறான உணவு மற்றும் வாழ்கைமுறை காரணமாக செல்களின் கழிவுகளை வெளியேற்றும் பணியில் சுணக்கம் ஏற்படுகிறது.

எனவே கழிவுகள் ஆங்காங்கே தேங்கிவிடுகிறது. சரி இப்பொழுது குழந்தைகளின் பால் புட்டியை எந்த தண்ணீரில் கழுவுவீர்கள் ? சுடு தண்ணீரில் தானே. ஏன் ? அழுக்குகள் நீங்கும், கிருமிகள் அழியும்.

சரி சிலர் தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்கிறார்கள். ஏன் ? கிருமிகள் அழியும். கொதிக்கவைத்து குடிப்பது தவறு தான் அதனுள் இப்பொழுது செல்ல வேண்டாம்.

தண்ணீரை சூடு செய்யும் போது அதில் சில பொருட்கள் நகர்வதை நீங்கள் பார்க்கலாம். சூடு ஆகும் போது நீரின் Molecules அனைத்தும் நகரத்துவங்கும்.

உணவுப் பொருட்களை சூடு செய்யும் போது அதில் இருந்து மணம் வெளிப்படுவதை நீங்கள் அறிவீர்கள். உணவில் உள்ள மணத்தை சூடு நகர்த்தி வெளி கொணர்ந்தது.

நமது நாட்டில் உள்ள பூக்களுக்கு மணம் உண்டு, காரணம் வெப்ப மண்டல நாடு. சூடு பூவின் மணத்தை நகர்த்தி வெளி கொணர்ந்தது.

ஊட்டி போன்ற குளிர் பிரதேச பகுதிகளில் உள்ள பூக்களுக்கு மணம் உண்டா ? என நீங்களே பரிசோதித்து பாருங்கள். பூ அழகாக இருக்கும் மணம் இருக்காது.

வயதான முதியவர் இறந்துவிட்டார் கையை தொட்டு பார்த்தால் ஐஸ் போல் உள்ளது. அசைவுகள் இல்லை. உயிருடன் இருந்த போது சூடு இருந்தது, அசைவு இருந்தது.

சுடாக இல்லாவிட்டால் இரத்தத்தில் வேகம் இல்லை என்ற பாடல் வரிகளையும் நினைவுப்படுத்துகிறேன். இது போல் இன்னும் பல உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

இதில் இருந்து என்ன தெரிகிறது. சூடு ஒரு பொருளை நகர்த்தும் என தெரிகிறது. சூடு இருந்தால் Movement இருக்கும் என தெரிகிறது. இது இயற்கை விதி. சூடு தான் சக்தி ( Energy ).

உடல் தனக்கு தேவையான பொருளை ஒரு போதும் வெளியேற்றாது. அதேப்போல் தனக்கு தேவை இல்லாத பொருளையும் உள்ளே வைத்திருக்காது.

இப்பொழுது நமது உடலில் கழிவுகள் தேங்கி உள்ளனவா. அதற்கு வருவோம். ஒரு பொருளை நகர்த்த என்ன வேண்டும் ? வெப்பம்.

சரி இப்பொழுது உடலில் கழிவுகள் அதிகம் தேங்கிவிட்டது. உடல் என்ன செய்யும் ? நீ எக்கேடோ கெட்டு நாசமாய் போ என விட்டுவிடுமா ? அல்ல.

உடல் நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள மாவுச்சத்தை (Glucose) அதிகம் எரித்து வெப்பத்தை உருவாக்கும். இந்த வெப்பம் என்ன செய்யும் ?

தேங்கி உள்ள கழிவுகளை நகர்த்தி நகர்த்தி இரத்த ஓட்டத்தில் கலக்கச்செய்யும். பின் இந்த கழிவுகள் அனைத்தும் தரம் பிரிக்கப்படும்.

எந்த எந்த கழிவுகளை எந்த வழியாக வெளியேற்றினால் உடலுக்கு தீங்கு நேராது என்று உடல் முடிவு செய்து அதன் வழியாக கழிவுகளை வெளியேற்றிவிடும்.

மூக்கின் வழி சளியாகவும்.
பொருங்குடலின் வழி திடக்கழிவாகவும்.
தோலின் வழி வியர்வையாகவும்.
சிறுநீர்பை வழி சிறுநீராகவும்.

உடல் பாதுகாப்பான முறையில் கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றி விடுகிறது.

இதைத்தான்னய்யா காய்சல் என்கிறோம். நமது தவறான உணவு மற்றும் வாழ்க்கைமுறை காரணமாக தேங்கிய கழிவுகளை உடல் வெப்பத்தை உருவாக்கி வெளியேற்றும் செயலே காய்சல்.

உலகிலேயே மிகச்சிறந்த நண்பன் யார் தெரியுமா ? உங்கள் உடல் தான். நீங்கள் அவனுக்கு கோடி முறை கெடுதல் செய்தாலும் கோடியை தாண்டி உங்களுக்கு நல்லது மட்டுமே செய்வானய்யா. கெடுதலை நினைக்க கூட அவனுக்கு தெரியாது.

அப்பேர்பட்ட இயற்கையின் அற்புதப்படைப்பான, இந்த உடல் வெப்பத்தை உண்டாக்கி கழிவுகளை வெளியேற்றும் போது பலர் என்ன செய்கிறார்கள் ?

அலோபதி சிகிச்சையில் ஊசி போட்டு மாத்திரை எடுக்கிறார்கள். இந்த ஆங்கில மருந்து என்ன செய்கிறது ? கழிவுகளை வெளியேற்ற உடல் சிரமப்பட்டு உருவாக்கிய வெப்பத்தை குறைத்து விடுகிறது.

முதல் முறையாக நீங்கள் செய்த கெடுதலால் உங்கள் நண்பனான உடல் கலங்குகிறான். அவன் தான் உங்கள் நண்பன் ஆயிற்றே விடுவானா. மீண்டும் வெப்பத்தை உருவாக்க முயற்சிப்பான். தொடர்ந்து நீங்கள் ஆங்கில சிகிச்சை எடுத்து. வெப்பத்தை குறைத்து விடுவீர்கள்.

வெப்பம் குறைந்ததால் Movement இருக்காது. Movement இல்லாததால் கழிவுகள் வெளியேறாமல் உடலிலேயே தங்கிவிடுகிறது. மீண்டும் மீண்டும் காய்சலை ஏற்படுத்தி கழிவுகளை வெளியேற்ற முயற்சிப்பான்.

நீங்களும் தொடர்ந்து ஆங்கில சிகிச்சை எடுத்து கழிவுகளை அடக்கி வைத்துவிடுவீர்கள். இப்படி தொடர்ந்து பல வருடங்களாக தேங்கிய கழிவுகள் பல்வேறு நோய்களாக உருவெடுக்கிறது.

பல நாடுகளில் காய்சலுக்கு ஆங்கில மருத்துவர்கள் வைத்தியம் பார்பதில்லை என உங்களுக்கு தெரியுமா ? காய்சலுக்காக வைத்தியம் பார்க்க சென்றால் திட்டி அனுப்பி ஓய்வெடுக்கச் சொல்வார்கள்.

இங்கு உள்ள நிலமையோ தலைகீழ் சொல்லவே வேண்டாம். ரோட்டில் நடந்துச்செல்பவனை வழி மறித்து ஊசி போடும் நாடு இது.

உடல் தன்னுள் தேங்கிய கழிவுகளை வெளியேற்றும் செயலே காய்சல். இந்த உடல் சுத்திகரிப்பு வேலை நடக்கும் போது அமைதியாக ஓய்வு எடுத்தாலே இரண்டு மூன்று நாட்களில் காய்சல் தானாக சரியாகும்.

சரி இப்பொழுது டெங்கு டங்குங்கராங்களே அதற்கு வருவோம் வாங்க.

ஒரு இடத்தில் குப்பை உள்ளது, அங்கு என்ன இருக்கும் ? பூச்சி, புழுக்கள்.

நாய் அடிபட்டு ரோட்டில் இறந்துள்ளது. அதன் உடலில் என்ன இருக்கும் ? புழுக்கள்.

தானியங்களை காற்று கூட புகாத புட்டியில் அடைத்து வைத்துவிட்டோம். சிறிது நாள் கழித்து திறந்து பார்த்தால் அதில் என்ன இருக்கும் ? வண்டுகள், பூச்சிகள், புழுக்கள்.

குப்பை மற்றும் நாய் மீது இருந்த புழு பூச்சிகள் சிறிது நேரத்திற்கு முன்பு அங்கு இல்லை. இந்த புழு பூச்சிகள் எங்கிருந்து வந்தது ? பக்கத்து ஊரில் இருந்து பேருந்தில் ஏறி வந்ததா ?

காற்று கூட புகாத புட்டியில் அடைத்து வைக்கப்பட்ட தானியத்தில் புழு, வண்டுகள் எங்கிருந்து வந்தது ? சிந்தியுங்கள்.

"இயற்கை விதி என்னவென்றால் எங்கு உணவு உள்ளதோ, அங்கு உயிர்கள் படைக்கப்படும்."

புழு, பூச்சி, வண்டு எல்லாம் எங்கிருந்தும் வரவில்லை. அந்த இடத்திலேயே உற்பத்தி ஆனது என தெரிந்து கொண்டோம்.

ஒரு ஏக்கரில் வொண்டைக்காய் செடி பயிரிடப்பட்டுள்ளது. ஒரு செடியில் அதை உண்ணும் பூச்சி வந்து விட்டது. அந்த பூச்சி பக்கத்து செடியில் உட்கார்ந்து இது நமது உணவுதானா என முகர்ந்து பார்க்கும்.

அடுத்தடுத்த செடியில் பரிசோதித்து. தனது உணவு தான் நிறைய உள்ளது என தெரிந்துகொண்ட உடனே தனது இனத்தை வேகமாக பெருக்க ஆரப்பித்துவிடும்.

ஒவ்வொறு உயிரினமும் தன்னை இப்பூவுலகில் நிலை நிறுத்திக்கொள்ள இறைவன் கொடுத்த அறிவு இது.

மனிதனும் அப்படித்தானே, எனது பொருளாதாரத்திற்கு இரண்டு குழந்தைகள் போதும் என நிறுத்திக்கொள்கிறானே.

அடுத்த இயற்கை விதி உணவின் அளவை பொருத்து உயிரினங்கள் பெருகும்.

இயற்கை விதி இரண்டு !

1 - உணவு உள்ள இடத்தில் உயிரினங்கள் படைக்கப்படும்.

2 - உணவின் அளவிற்கு ஏற்ப உயிரினங்கள் பெருகும்.

சரி, புழு பூச்சிகளுக்கு, அந்த குப்பை என்னவாகிறது ? உணவு.

பூழுவிற்கு, நாய் என்னவாகிறது ? உணவு.

வண்டிற்கு, தானியம் என்னவாகிறது ? உணவு.

இந்த இயற்கை விதிகளை அப்படியே உடலுக்குள் பொருத்துங்கள்.

நமது தவறான உணவு மற்றும் வாழ்க்கைமுறை காரணமாக உடலில் கழிவுகள் தேங்குகிறது. இந்த கழிவுகள் கிருமிகள் என சொல்லப்படும் நுண்ணுயிர்களுக்கு உணவாகிறது.

"கழிவு, கிருமிகளுக்கு என்னவாகிறது ? உணவு."

கிருமிகளின் உணவாகிய கழிவுகளை நீங்கள் சேர்த்து வைத்ததால் அதை உண்டு அழிக்க கிருமிகள் அங்கு இயற்கையால் படைக்கப்பட்டு விட்டது. இப்பொழுது உணவு (கழிவு) உள்ள இடத்தில் உயிர்கள் (கிருமிகள்) படைக்கப்பட்டு விட்டதா ? ஆம்.

எப்படி வெண்டை செடியில் உள்ள பூச்சி, அதிக உணவை கண்டு தனது இனத்தை பெருக்கியதோ அதேப்போல், நுண்ணுயிர்கள் அதிக உணவை (கழிவு) கண்டு தனது இனத்தை பெருக்கும்.

இப்பொழுது நீங்கள் இரத்த பரிசோதனை செய்து பார்த்தால் கிருமிகளின் எண்ணிக்கை அதிகமாக காட்டும். அதுதான் அதிக உணவை கண்டு தனது இனத்தை பெருக்கிவிட்டதே.

உணவு இல்லை என்றால் மனிதன் என்ன ஆவான் ? இறந்து விடுவான் அல்லவா, அது போல் தான் உணவுகளாகிய கழிவுகள் தீர்ந்த பின் கிருமிகள் அழிந்துவிடும்.

நீங்கள் சேர்த்து வைத்து கழிவு, டெங்கு கிருமிக்கு பிடித்த உணவாக இருந்தால் டெங்கு காய்சல்.

நீங்கள் சேர்த்து வைத்த கழிவு, சிக்கன் குனியா கிருமிக்கு பிடித்த உணவாக இருந்தால் சிக்கன் குனியா காய்சல்.

நீங்கள் சேர்த்து வைத்த கழிவு, பன்றிக்காய்சல் கிருமிக்கு பிடித்த உணவாக இருந்தால் பன்றிக்காய்சல்.

அவ்வளவுதாங்க.

அனைத்து காய்சலுக்கும் மூல காரணம் கழிவுகளின் தேக்கமே.

இயற்கை விதி எப்படி உள்ளும் வெளியும் பொருந்துகிறது என்று பாருங்கள்.

இதை தான்

அண்டத்தில் உள்ளதே பிண்டம்
பிண்டத்தில் உள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்று தான்
அறிந்து தான் பார்க்கும் போதே.

என்று சித்தர் பாடல் நமக்கு உணர்த்துகிறது.

இறப்புகள் நிகழ்வதற்கு காரணம் இரண்டு

1 - அலோபதி சிகிச்சை.
2 - ஊடகம் ஏற்படுத்திய பயம்.

அனைத்து குற்றமும் நம்முள்ளே வைத்துக்கொண்டு அப்பாவி கொசுவின் மீது பழி போடுகிறோமே. இந்துனூண்டு கொசுவை வைத்தும், கண்ணுக்கு தெரியாத கிருமியை வைத்தும் எத்தனை எந்தனை வியாபாரங்கள்.

கொசு விரட்டிகள் - பயன்படுத்தினால் நுரையீரல் நோய்கள் - Corporate Allopathy மருந்து வியாபாரம் - விளைவு சாவு.

வீதிகளுக்கு கொசு மருந்துகள் - கொசுவை அழிக்கிறேன் என்ற பெயரில் பல்லுயிர் அழிப்பு - Collapse of Biodiversity - இயற்கை வழி விவசாயம் அழிவு - Corporate இரசாயன மருந்து வியாபாரம் - விளைவு மலடாய் போன மண்.

டெங்கு கொசு - டெங்கு காய்சல் - Corporate Allopathy மருந்து வியாபாரம் - விளைவு சாவு. என நீண்டு கொண்டே போகிறது பட்டியல்.

கிருமிகள் - Water Filter System வியாபாரம் - இதனால் நோய் - Corporate Allopathy மருந்து வியாபாரம் - விளைவு சாவு.

கிருமிகள் - Soap ,Hand Wash, அந்த Wash இந்த Wash கண்ட கண்ட Wash - விளைவு சாவு.

கிருமிகள் - தடுப்பூசி, Vaccination - Corporate Allopathy Business - விளைவு சாவு.

கிருமி வியாபார பட்டியலுக்குள் சென்றால் நிச்சயம் இந்த பதிவு போதாது. இதனுடன் நிறைவு செய்யலாம்.

இவர்களின் நோக்கம். நாங்கள் சொல்வதை சாப்பிடு, நாங்கள் சொல்வதை படி, எங்களுக்கு வேலை செய், எங்கள் பொருட்களை பயன்படுத்து, எங்கள் மருத்துவம் பார், எங்களுக்கு சம்பாதித்து கொடுத்து விரைவில் செத்துப்போ என்பதே.

இந்த உலக வல்லாதிக்க தீய சக்தியை அழிக்க நன்மக்கள் நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும்.

இவர்களின் கொட்டத்தை அடக்க ஒரே வழி, நமது முன்னோர்கள் நமக்கு அழகாய் வடிவமைத்துக் கொடுத்த அன்பும், அறமும், பன்பும் செரிந்த தற்சார்பு வாழ்க்கை முறைக்கு திருப்புவது மட்டுமே.

கழிவுகளை உடலில் தேக்கியது யார் குற்றம் ? டெங்கு வருவது வெளியில் உள்ள கொசுவால் அல்ல உங்கள் உடலில் உள்ள குப்பையால் தான் என இப்பொழுது தெரிகிறதா ? புரிகிறதா ?

உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா யாருக்கு நோய் எதிர்பு சக்தி அதிகமாக உள்ளதோ அவர்களுக்குத்தான் காய்சல் வரும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் காய்சல் வர வாய்ப்பே இல்லை.

கொசுக்களினாலோ, கிருமிகளினாலோ நோய் வருவது உண்மையாக இருந்தால் என்றைக்கோ மனித இனம் உரு தெரியாமல் அழிந்து போயிருக்கும்.

உண்மை என்னவென்றால் கிருமிகள், பல்லுயிர்கள் உயிருடன் இருந்தால் தான் நாம் இந்த உலகில் உயிருடன் வாழ முடியும்.

பால் தயிராவது கிருமியால் தான்.
மாவு புளிப்பது கிருமியால் தான்.
சோறு நீராகாரமாவது கிருமியால் தான்.
பல பண்நாட்டு உணவுகள் பக்குவமடைவது கிருமியால் தான்.
குப்பை மட்குவது கிருமியால் தான்.
மண் வளமாவது கிருமியால் தான்.
உண்ட உணவு செரிப்பதே கிருமியால் தான்.
ஏன் முதன் முதலில் உயிர் உருவானதே இந்த கருமியால் தான்.

உண்மை இப்படி இருக்க. கிருமியினால் நோய் வரும் என்பது அண்டப்புளுகு. Corporate Allopathy தனது வியாபாரத்தை பெருக்கவே இந்த புளுகு புளுகுகிறது.

உலக வல்லாதிக்க தீய சக்திகள் தனது மென்பொருள் ஏற்றப்பட்ட சுயமாக சிந்திக்கத் தெரியாத மருத்துவர்களை வைத்து அரசுகளை கைக்குள் போட்டுக்கொண்டு ஒன்றும் இல்லாத இந்த கொசுவை வைத்தும், கிருமிகளை வைத்தும் மிகப்பெரும் வியாபார வேட்டையில் ஈடுபடுவது மட்டும் அல்லாமல் மக்களையும் அழித்து வருகிறது.

நாம் நமது உடலை பற்றி தெரிந்துகொள்ளாவிட்டால் இப்படித்தான் தொடர்ந்து நமது தலையில் மிளகாய் அரைத்து அழிப்பார்கள்.

நாம் கற்க வேண்டிய முதல் கல்வி உடலை பற்றிய கல்வியாக இருக்க வேண்டும். பள்ளிகளில் இதை தனிப்பாடமாகவே கொண்டு வர வேண்டும்.

இயற்கையின் அற்புதப்படைப்பான இப்பூவுடலின் பேராற்றலை புரிந்து கொள்ளாமல், உலக வல்லாதிக்க தீய சக்திகளுக்கு நமது அறிவை பலி கொடுத்தது நம் குற்றமே.

அழிக்க வேண்டியது கொசுவையா ?

நமது தவறான உணவு மற்றும் வாழ்க்கை முறையையா ?

என நீங்களே முடிவு செய்யுங்கள்.

நல் உள்ளம் படைத்தோர் இந்த கட்டுரையை உலக மக்களுக்கு கொண்டு செல்வீர்கள் என நம்புகிறேன்.

நன்றி...
வாட்ஸ்அப் தகவல்

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்