கும்பகோணம் தீ விபத்தில் பலியான குழந்தைகளின் குடும்பத்திற்கு 4 வாரத்தில் இழப்பீடு வழங்க உத்தரவு... ~ சஹாரா தமிழ்

ads

புதன், 19 அக்டோபர், 2016

கும்பகோணம் தீ விபத்தில் பலியான குழந்தைகளின் குடும்பத்திற்கு 4 வாரத்தில் இழப்பீடு வழங்க உத்தரவு...

கடந்த 2004-ஆம் ஆண்டு, ஜூலை 16-ஆம் தேதி கும்பகோணத்தில் இயங்கிய ஸ்ரீ கிருஷ்ணா, சரஸ்வதி நர்சரி என்ற தனியார் பள்ளிகளில் சமையல் அறையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 94 பள்ளி குழந்தைகள் தீயில் கருகி பரிதாபாமாக உயிரிழந்தனர். மேலும் 16 குழந்தைகள் படுகாயங்களுடன் உயிர் பிழைத்தனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு உரிய இழப்பீட்டை நிர்ணயம் செய்வதற்கு, ஏற்கெனவே ஓய்வுப் பெற்ற சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இதன்படி, பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினரிடம் விசாரணை நடத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில்,  பள்ளி தீ விபத்தில் பலியான குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.5 லட்சமும், கடும் தீக்காயம் அடைந்த 3 குழந்தைகளுக்கு தலா ரூ.6 லட்சமும், மேலும் 3  குழந்தைகளுக்கு. 5 லட்சமும், சிறிய காயமடைந்த 10 குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரமும் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று பரிந்துரையில் நீதிபதி வெங்கட்ராமன் அளித்தார்.

இந்த இழப்பீடு தொகை பொதுமானதாக இல்லை  என தீ விபத்தில் உயிர் இழந்த மற்றும்  பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் தரப்பில் தொரிவிக்கபட்டது. மேலும்  இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பாதிக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் இன்பராஜ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய பட்டாது. அந்த மனுவில், மோட்டார் வாகன விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிர்ணயிக்கப்படும் இழப்பீடு தொகையின் அடிப்படையில், நீதிபதி வெங்கட்ராமன் இந்த இழப்பீட்டை நிர்ணயம் செய்துள்ளார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி, ஒருவருக்கு உயிர் வாழ உரிமை உள்ளது. இவர்களது உயிரை பாதுகாப்பது அரசின் கடமையாகும். எனவே, தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு என்று நிர்ணயம் செய்து, அந்த தொகையை பெற்றோருக்கு வழங்க வேண்டும். தீ காயத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தலா ரூ.20 லட்சம், சிறு காயமடைந்தவர்களுக்கு ரூ.5  லட்சம் இழப்பீடாக நிர்ணயம் செய்ய வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

கடந்த முறை விசாரணையில், தமிழக அரசு சார்பில் இழப்பீடு தொகை அதிகரிக்க முடியாது, இருப்பினும் இழப்பீட்டு தொகை கேட்டு விண்ணப்பம் செய்த நாளிலிருந்து, 6 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்று நீதிபதி வெங்கட்ராமன் குழு பரிந்துரைத்துள்ளது. ஆனால், இந்த இழப்பீட்டு தொகைக்கான வட்டியை, தீ விபத்து நடைபெற்ற நாளில் இருந்து கணக்கிட்டு வழங்க வேண்டும். அதுவும் வட்டி தொகையை 9 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை பரிசிலிப்பாக தெரிவிக்கபட்டு இருந்தது. இதனை தொடர்ந்து தமிழக அரசு பதிலளிக்க ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த மனு இன்று  தலைமை நீதிபதி கவுல் ,நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் வட்டியுடன் 2004 ஆண்டில் இருந்து வழங்குவதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இத்தொகையை கடந்த 2004 முதல் 2011 வரை 8 சதவீதமும், 2011 முதல் 2012 வரை 8.6 சதவீதமும், 2012 முதல் 2016 வரை 8.7 சதவீத வட்டியும் கணக்கீட்டு வழங்கப்படுவதாக தெரிவித்தார். இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள் பாதிக்கபட்ட குழந்தைகளின் குடும்பத்திற்கு இழப்பீட்டு தொகையுடன் வட்டியை சேர்த்து நான்கு வாரத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்