'யாருக்கு ஆதரவு என்பதை நாளை அறிவிப்போம்': மனிதநேய ஜனநாயக கட்சி அறிவிப்பு..! ~ சஹாரா தமிழ்

ads

வியாழன், 9 பிப்ரவரி, 2017

'யாருக்கு ஆதரவு என்பதை நாளை அறிவிப்போம்': மனிதநேய ஜனநாயக கட்சி அறிவிப்பு..!



பிப்.09,. தங்களுடைய ஆதரவு யாருக்கு என்பதை நாளை அறிவிப்போம் என மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரான M.தமிமுன் அன்சாரி MLA தெரிவித்துள்ளார். மனிதநேய ஜனநாயக கட்சியை துவக்கிய தமிமுன் அன்சாரி,கட்சி துவங்கிய ஒரு மாதத்திற்குள் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து நாகப்பட்டினம் தொகுதியில் வென்றார்.

 இந்நிலையில் தற்போதைய பரபரப்பான சூழலில் தமிமுன் அன்சாரியின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி எழுந்தது.இதற்கு பதிலளித்துள்ள மனித நேய ஜனநாயக கட்சியின் பொது செயலாளரான தமிமுன் அன்சாரி மற்றும் அதன் மாநில நிர்வாகிகள் நாளை தங்கள் கட்சியின் முடிவை அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 நாளை முடிவை அறிவிப்பதாக தமிமுன் அன்சாரி கூறுவதை வைத்து பார்க்கும் போது,அவர் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதில் இருந்து மஜக எடுக்கும் அனைத்து முடிவுகளும் முதிர்ந்த அரசியல் என்று அனைவராலும் பேசப்படுகிறது...

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்